28/Sep/2020 03:37:16
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கிஸான் திட்டத்தில் முறைகேட்டில் 570 பேரிடம் இருந்து இதுவரையில் ரூ.45 லட்சம் ரூபாய் வரையில் மீட்கப்பட்டுள்ளது..மீதமுள்ள ரூ.20 லட்சத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..
ஈரோடு மாவட்டத்தில் கிஸான் திட்டத்தில் இதுவரையில் கைது நடவடிக்கை எதுவும் இல்லை.கொரோனா நோய் பாதிக்கபட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களை பேருந்தில் வீடுகளுக்கு அனுப்பபடுவதாக எழுந்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கபடும்.. ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து இது வரை ரூ. 6 லட்சம் அபராதம் வசூலிக்கபட்டுள்ளது.இந்த பணிகள் இன்னும் தீவிரப்படுத்தபடும். பொதுமக்கள் தங்களது செல்ல பிராணியான நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி போட வேண்டும். தெருவில் சுற்றித்திரியும் நோய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் கதிரவன்.