logo
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் விநியோகம்

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் விநியோகம்

19/Apr/2021 10:30:36

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை  கலைஞர் தமிழ்ச்சங்கம்  சார்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரானா  தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகினறனர். அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் பொது மக்களுக்கு முக கவசம் கபசுர குடிநீர் கிருமிநாசினி ஆகியவற்றை  வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், திமுத தலைவர் மு,.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில்  புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம்  சார்பில் புதுக்கோட்டை நகர மக்களுக்கு 15 நாள்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கும் முகாமை   அதன் நிறுவனர், செயலாளர்  . சந்திரசேகரன்   கடந்த 14.4.2021 -ஆம் தேதி புதுக்கோட்டை மாட்டுச்சந்தையில் தொடங்கி வைத்தார்


அதைத்தொடர்ந்து 6-ஆவது நாளான திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வாயிலருகே   கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனர் . சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


இதில், நிர்வாகிகள் அரு. வீரமணி, ராம. செல்வராஜ், சுப. சரவணன், அசோக்பாண்டியன், ராமகிருஷ்ணன், வேலுச்சாமி, ராஜேந்திரன், ராய. முத்துக்குமார், சேவியர்பாபு, இதயம்அப்துல்லா, திருவப்பூர் ரங்கராஜு, சிப்காட் சந்திரசேகரன், ராஜு, பூக்கடைமுருகேசன், சந்தைகுமார், சண்முகம், மூர்த்தி, கலை இலக்கிய பேரவை நிர்வாகிகள் சிஇஓ. பரமசிவம், தயாளன், மணிமாறன், திரைப்பட நடிகர் அறிவழகன், வெண்ணாவல்குடி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

                                                   

Top