08/Feb/2021 08:08:16
புதுக்கோட்டை, பிப்: மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணி சார்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் சரவணன், வழக்குரைஞர் அணி மாநில துணை செயலாளர் பொன் கஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தார். இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர் டாக்டர். முகமது உசேன் வரவேற்புரையாற்றினார்.
கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் சார்லஸ் மோசஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட விவசாய அணி செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி ஆகியோர் கருத்துரையாற்றினர். இளைஞர் அணியின் மாநில செயலாளர் கவிஞர். சினேகன் சிறப்புரை நிகழ்த்தினார்.
பாஜகவிலிருந்து 1-ஆவது வார்டு பொறுப்பாளர் சுப்பிரமணி, திமுகவிலிருந்து பொறியாளர் சிவசாமி, காங்கிரஸ் கட்சியிலிருந்து திருமயம் சட்டமன்றத் தொகுதி பொருப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட 60 பேர் கவிஞர். சினேகன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
ஏற்பாடுகளை மத்திய மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்த், புதுக்கோட்டை நகர செயலாளர் பகுரூதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர். நிறைவில், பொறியாளர் முருகவேல் நன்றி கூறினார்.
இதில், கரூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இளங்கார்த்திகேயன், கரூர் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு மாவட்ட செயலாளர் தனிகாசலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.