logo
வேளாண் சட்டங்களைக் கண்டித்து கந்தர்வகோட்டையில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களைக் கண்டித்து கந்தர்வகோட்டையில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

28/Sep/2020 12:02:16

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் எம். ராஜா தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிகக்குழு உறுப்பினர் ந. ஸ்டாலின் , ஒன்றியக்குழு உறுப்பினர் எம். ராஜேந்திரன், என். ஜானகிராமன் உள்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட திமுக மற்றும் மதிமுக, இடதுசாரி கூட்டணி கட்சியினர் காலந்துகொண்டனர்.

Top