logo
 பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் ஊர்வலம்-மஞ்சள் நீராட்டுக்கு தடை: ஈரோடு மாவட்டஆட்சியர் உத்தரவு

பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் ஊர்வலம்-மஞ்சள் நீராட்டுக்கு தடை: ஈரோடு மாவட்டஆட்சியர் உத்தரவு

10/Apr/2021 09:19:38

ஈரோடு, ஏப்: ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில் விழாவில், கம்பம் ஊர்வலம், மஞ்சள் நீராட்டுக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன்  உத்தரவிட்டுள் ளார்.

ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோயில் களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும். 

இதில், கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியில்  மாநகர் மக்கள் அனைவரும் பங்கேற்று வழிபடுவர். மூன்று கோயில்களிலும் கம்பம் பிடுங்கப்பட்டு மாநகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வல மாக பூசாரிகள் தோளில் சுமந்து வருவார். அப்போது மக்கள் திரளாக கூடி நின்று உப்பு, மிளகு தூவி வழிபடுவர். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இக்கோயில்களின் விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், நடப்பாண்டுக்கான விழாவினை எளிமையாக நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதன்பேரில், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கடந்த 6-ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 7-ஆம் தேதி மூன்று கோயில்களிலும் கம்பம் நடப்பட்டது. காரைவாய்க் கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா மற்றும் சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டம் எளிமையாக நடத்தப்பட்டது.  வெள்ளிக்கிழமை மாவிளக்கு மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏப்.10-ஆம் தேதிக்கு மேல் எந்த கோயில்களிலும் விழா நடத்த அனுமதி இல்லை என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் வகையறா கோயில் திருவிழா ஏற்கெனவே அறிவிக்கப் பட்டு விட்டதால், மீதமுள்ள கோயில் நிகழ்ச்சிகளை கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் சனிக்கிழமை  ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றுவதற்கு தடை விதித்து, கோயில் ஊழியர்களே புனித நீர் ஊற்ற உத்தரவிட்டார். மேலும், கம்பம் பிடுங்கும் நிக்ழ்ச்சி மற்றும் கம்பம் ஊர்வலம், மஞ்சள் நீராட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து  ஆட்சியர் சி கதிரவன் கூறியதாவது:

தேசிய பேரிடர் மற்றும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்களுக்கு புனித நீர், பால் ஊற்றுவது போன்ற நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில்களில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. 

பக்தர்கள் கொண்டு வரும் பூ, தேங்காய் பழம் முதலான எந்த பூஜை பொருட்களுக்கும் பூசாரிகளால் வாங்கப்பட மாட்டாது. பூஜை பொருட்களுக்கு அனுமதி இல்லை. எப்போதும் கம்பம் எடுக்கும் நிகழ்வு மாலை 3 மணிக்கு நடைபெறும். ஆனால், நடப்பாண்டு அதிகாலை 5.05மணிக்கு எடுக்கப்படுகிறது. 

கோயில் பூசாரிகள் மட்டும் இந்நிகழ்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று கோயில்களின் கம்பமும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்படும். இதற்கு பொதுமக்கள் அனுமதி இல்லை. மஞ்சள் நீராட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, முக கவசம், சமூக இடை வெளி யை கடைபிடித்து பக்தர்களும், பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


Top