logo
பள்ளி திறக்கப்படுவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம்

பள்ளி திறக்கப்படுவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை- அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம்

27/Sep/2020 12:34:05

by c.raj-erode ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் 26- லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் திறப்பு, குடிநீர் மேல்நிலை தொட்டி அமைப்பு, குளம் தூர்வாரும் பணிக்கு பூமி பூஜையை தொடக்கி வைத்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கபடும் என்று பள்ளி கல்வித்துறை ஆணை பிறப்பிக்க வில்லை. வருவாய் துறையின் மூலமாக தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் சந்தேகங்களைத் தீர்க்க பெற்றோரின் சம்மதக் கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க 14474 என்று உதவி எண்ணிலும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் சந்தேகங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும் மாணவர்கள் கோரிக்கை ஏற்று தான் சந்தேகங்களை தீர்க்க பெற்றோர் ஒப்புதல் பெற்று வரலாம் என்றும் கூறினார். மேலும், நாளை மறுநாள் அனைத்து துறை அதிகாரிகளுடன் நடைபெறும் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு தமிழக முதல்வர் தெளிவாக அறிவிப்பார் என்றும் அதுவரை மாணவர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் கூறினார்.

 

Top