07/Mar/2020 05:32:54
தாய்மொழி அல்லாத
பல்வேறு மொழிகளை புரிந்துகொள்ளலாம் ஆனால், தாய்மொழியை மட்டும் தான் உணர்ந்துகொள்ள
முடியும் என்றார் கல்வியாளர் ராசி.பன்னீர்செல்வம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தமுஎகச
சார்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தாய்மொழி தின கருத்தரங்கில் பங்கேற்று மேலும்
அவர் பேசியது:
மனித நாகரிகம் மொழியில்தான் தொடங்குகிறது. உணவு உற்பத்தியைவிட, பொருளாதாரத்தைவிட, அரசியலைவிட மனித நாகரிகத்தின் உச்சமாகக் கருதப்படுவது மொழிதான். ஒருவனுடைய நிலவியலோடு, வாழ்வியலோடு, சமூகவியலோடு, அரசியலோடு, தொன்மங்களோடு எந்த மொழி பொருந்திப்போகிறதோ அதுதான் அவனது தாய்மொழி. தாய்மொழி அல்லாத எந்த மொழியும் புழங்கும் மொழிதான். இதர மொழிகள் எல்லாம் புரிந்துகொள்ள உதவுகிறது. தாய் மொழி மட்டும்தான் உணர்ந்துகொள்ள உதவுகிறது.
இயற்கை எய்தினார், காலமானார் போன்ற சொற்களுக்கு நேரடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாது. சில மரபுகளை தாய்மொழியினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்நிலையில், உலகில் 40 % பேருக்கு அவர்களின் தாய்மொழியில் பாடத்திட்டங்கள் இல்லை என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிபரம் சொல்கிறது. ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் உள்ள பெரும்பகுதியான மக்களின் தாய்மொழிகள் அலுவல் மொழிகளாக இல்லை.
பேசுவதற்குத்தான் மொழி. பேச்சுவழக்கில் இல்லாத எந்த மொழியும் பயனற்ற மொழிகளே! உலகின் மிக மூத்த மொழிகளான செவ்வியல் மொழிகளில் இன்றைக்கும் மக்கள் புழங்கும் மொழிகளாக இருப்பது தமிழும், சீனமும் தான். அப்படிப்படை சிறப்பு வாய்ந்த மொழியை இந்திய அரசு உச்சத்தில் வைத்துக் கொண்டாட வேண்டும்.
இந்தியாவிலேயே
அதிக மொழிச் சுரணை உள்ளவனாக
தமிழன் இருந்து வந்திருக்கிறான். தாய்
மொழிக்கு ஒரு பிரச்சினை என்றால்
மற்றவர்களைவிட தமிழன் வெகுண்டெழுகிறான்தமிழன் ஒருபோதும் தனது
மொழியை விட்டுக்கொடுக்க மாட்டான் என்று பேசினார்.
கருத்தரங்கில்,
சங்கத்தின் கிளைத் தலைவர் ஷெல்லி மனோகர் தலைமை வகித்தார்.மாவட்டச்செயலர் சு. மதியழகன்,
மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.