17/Mar/2021 05:30:19
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் புதுக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான டெய்சிகுமாரிடம் வைப்புத்தொகை செலுத்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து வேட்பாளருக்கான உறுதிமொழியை வாசித்தார்.
வேட்பு மனுதாக்கல் நிகழ்வில் அதிமுக நகரசெயலர் க. பாஸ்கர், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் எஸ்.ஏ.எஸ். சேட் என்ற அப்துல்ரகுமான் மற்றும் வழக்குரைஞர் எஸ். முத்தையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெயலட்சுமி, பழனிவேலு, ஜீவாசெல்வராஜ் ,தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.