06/Mar/2021 01:12:08
திருச்சி, மார்ச்: ஶ்ரீரங்கம் அரங்கநாதருக்கு அழகு சேர்த்துவரும் பாண்டியன் கொண்டை மற்றும் திருவாபரணங்களை வழங்கிய திருவேங்கட ராமாநுஜ ஜீயரென்னும் ஸ்ரீமான் அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிகளின் 144-ஆவது தீர்த்த மஹோத்ஸவம் விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருவரசில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் பரிவார மரியாதைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில், வெங்கடாத்ரி சுவாமிகளின் அரங்கன் சேவித்தருளிய கீர்த்தனங்களில் 9 கீர்த்தனங்கள் (நவரத்தின கீர்த்தனம்) இசைக்கப்பட்டது.
வெங்கடாத்ரி சுவாமிகளின் வழிவந்த அரக்கோணம் பழனிபேட்டை திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி குழுவினர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழுவினர் இதில் கலந்து கொண்டு கீர்த்தனங்களை இசைத்தனர்.
இதையொட்டி வெங்கடாத்ரி ஸ்வாமிகள் உஞ்சவிருத்தி (பிச்சை) எடுத்து அரங்கனுக்கு சார்த்திய நகைகள் (பாண்டியன் கொண்டை) அனைத்தும் சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் சார்த்தி தீர்த்த மகோத்சஸவம் நடத்துவது நூறாண்டுகளுக்கு மேலாக மரபாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.