logo
புதுக்கோட்டை,திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுக்கோட்டை,திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

01/Mar/2021 11:38:38

புதுக்கோட்டை, பிப் : புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவுடன் கூடிய மாசி பெருந் திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி  21-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 28.02.21 -ஞாயிறு இரவு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முத்துமாரியம்மன்அம்மன்  வீதிஉலா நடைபெற்றது பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிகம்பத்தில் கொடியேற்றப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் நேற்று காலை முதல் பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

8-ஆம் தேதி தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற    8.3.2021-ஆம் தேதி    நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். மாசித்திருவிழா 16.3.2021 -ஆம் தேதியுடன்  நிறைவு பெறுகிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.  

Top