logo
விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை

26/Sep/2020 11:16:16

புதுக்கோட்டை: விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனா;. 

 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், வாண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் 13.9.2020 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் முக எலும்புகள் மற்றும் நெஞ்சு எலும்புகள் முறிவுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

விபத்தில் காயமுற்ற பரமசிவத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பூபதி கூறியது:இந்த விபத்தில் பரமசிவத்தின் முக எலும்புகள் கடுமையாக சிதைவுற்று பற்கள் நேர்த்தியாக இல்லாத காரணத்தால் நீர் அருந்தவும்  உணவு உண்ணவும் இயலவில்லை. மேலும் வாய் திறக்கவோ பேசவோ முடியவில்லை.  இவருக்கு பல்வேறு பரிசோதனை செய்து அதிக ரத்த சர்க்கரை அளவை இன்சுலின் மூலம் குறைத்து முக சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.  முதற்கட்டமாக மூன்றாக உடைந்த மேல்தாடை எலும்பை கம்பிகள் கொண்டு கட்டி ஒன்றாக்கி அதனை கன்ன எலும்பு வளைவுடன் தொங்கு கம்பிகள் மூலம் இணைத்து பற்கள் கட்டி வைக்கப்பட்டது.  இரண்டாம் கட்டமாக உடைந்த மேல்தாடை முகப்பை தொங்கு கம்பிகள் மூலம் நாசியின் பக்கவாட்டு எலும்புகளுடன் கட்டப்பட்டு பழைய முக அமைப்பு கொண்டுவரப்பட்டது.  தற்போது இவரால் நீர் அருந்தவும் உணவை கடித்தும் சாப்பிட முடியும்.  தற்போது அவருடைய முகம் பழைய பொலிவு மற்றும் அழகுடன் காணப்படுகிறது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்  சாதனை புரிந்துள்ளனர் என்றார்.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி கூறியது: பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு நோய்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இத்தகைய  கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் வழக்கமான அனைத்து பிற நோய்களுக்கும் தொடர்ந்து உயர்தர சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அறிவுறுத்தல் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருவதுடன் பல்வேறு புதிய மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலைவிபத்தில் காயமடைந்து முகம், பற்கள் பாதிக்கப்பட்ட வாண்டான்விடுதி கிராமத்தைச் சோ;ந்த பரமசிவம் என்பவருக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மேற்கொண்ட சிறப்பான சிகிச்சையால் உயிர்  காப்பாற்றபட்டதுடன், முகத்தை பழைய நிலைக்கு சீரமைத்து சாதனை படைத்துள்ளது பாராட்டுக்குரியது என்றார்.

 சிகிச்சைக்கு பின் குணமடைந்த பரமசிவம் கூறியது: கூலி வேலை செய்து வருக்கும்  55 வயதாகிறது. அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்தேன். எனது முகம் மற்றும் நெஞ்சக எலும்புகள் முறிவுடன் மிகவும் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக  சேர்ந்த எனக்கு அரசு மருத்துவர்கள் மிகவும் திறம்பட செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து என்னுடைய முகத்தை பழைய நிலைக்கு குறுகிய நாட்களிலேயே சீரமைத்து எனக்கு மறுவாழ்வு கொடுத்த  மருத்துவர்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் கோடி நன்றிகள் என்றார் அவர்.


Top