logo
கோபிசெட்டிபாளையத்தில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

கோபிசெட்டிபாளையத்தில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

25/Sep/2020 05:20:22

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது மூன்று வேளாண் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும் மசோதாக்களை எதிர்த்து மத்திய அமைச்சரை ராஜினாமா செய்யவேண்டும் மசோதாக்களை நிறைவேற்றி விவசாயிகளுக்கு பச்சை துரோகமிழைத்த பாஜக அரசையும் துணை போன அதிமுக அரசையும் கண்டித்தும் இந்திய விவசாயிகள் வாழ்வாதரத்தை இழந்து கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கும் நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளையும் விவசாயத்தையும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் வேளாண் மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளன எனவும் இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டுவர முயற்சிப்பது உள்ளிட்ட மசோதாக்களை எதிர்த்து மானமுள்ள மத்திய அமைச்சர் ஒருவரே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதிமுக அரசோ மசோதா நிறைவேற கைதூக்கி ஆதரவளித்துள்ளது. இந்த பச்சை துரோகத்தை கண்டித்து பஞ்சாப் ஹரியானா உட்பட நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொந்தளித்து கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் விவசாயிகளை பாதிக்கும் இந்த மூன்று மசோதக்களையும் திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Top