logo
நீர்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் மழை: 102 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை...

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மீண்டும் மழை: 102 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை...

25/Sep/2020 04:36:30

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளைநிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகும். முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. அதைப்போன்று கோயம்புத்தூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது இதனால் பில்லூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 101 அடியை நெருங்கியது. 102 அடி வந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம்.அதன்படி வெள்ள அபாய எச்சரிக்கையும் கரையோர பகுதி  மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று வெகுவாக குறைந்தது.  இந்நிலையில் நேற்று மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த காலை 7 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,555  கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 102 அடி நெருங்கி வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு பகுதியிலும் வருவாய் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.   


Top