13/Feb/2021 02:37:55
புதுக்கோட்டை, பிப்: நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார்.
மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் மாவட்ட செயற்குழு, உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுப்பதோடு, அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.