09/Feb/2021 11:44:55
ஆன்மீக சொற்பொழிவாளரும், முருக பக்தருமான கிருபானந்தவாரியாரின் பிறந்தநாளை(ஆக.25) இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை(பிப்.9) வேலூர் சுற்றுப்புறப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.அந்த பிரசாரக்கூட்டத்தில் முதல்வர் பேசுகையில்,கிருபானந்த வாரியார் பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்