logo
நல்லமருந்து... நம்ம நாட்டு மருந்து...  வாழைப்பழம்..

நல்லமருந்து... நம்ம நாட்டு மருந்து... வாழைப்பழம்..

11/Feb/2021 07:06:11

முக்கனிகளாக போற்றப்படும் மா, பலா, வாழை, இவை மூன்றும் சுவை மிகுந்த இனிப்பான பழங்களாக இருந்தாலும். முதலில் புளிப்பு சுவையை பிரதானமாக இவைகளில் உள்ளதாக சித்த மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகிறது.

இதில் வாழைப்பழத்தில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, அதிகமான கலோரியை உட்கொண்டோமா என்ற ஓர் உணர்வைத் தவிர்க்கலாம். அதோடு காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடும் போது, அது வேலை நேரத்தில் கண்ட உணவுகளின் மீதுள்ள ஆவலைத் தடுக்கும்.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. சொல்லப்போனால் வாழைப்பழம் செரிமான மண்டலத்திற்கு நண்பன் போன்றது. இது எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள். ஆகவே வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுகிறோமே என்ற ஓர் எண்ணம் எழுந்தால், அதை விட்டொழியுங்கள். வாழைப்பழம் செரிமான மண்டலத்திற்கு கடுமையான வேலையைக் கொடுக்காமல், அதற்கு மாற்றாக செரிமான மண்டலத்திற்கு ஒரு வகையான உயவுப் பொருளை வழங்கும்.

சுவையான மற்றும் மென்மையான வாழைப்பழம், செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வில் இருந்து விடுவிக்கும்.

வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது. ஆகவே அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால், அது குடலில் நல்ல பாக்டீரியாக் களின் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும் வாழைப்பழம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நொதிகளையும் உற்பத்தி செய்யும்.

வாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தை மேம்படுத்த உதவும். குடலியக்கம் சிறப்பாக இருந்தால், செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

வாழைப்பழத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளுள் ஒன்று இது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். வாழைப்பழத்தில் உள்ள நொதிகள், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவரது செரிமான மண்டலம் சுத்தமாக இருந்தால், உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் முறையாக உறிஞ்சப்படும். அதோடு வாழைப்பழத்தில் அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்து, புருக்டோஸ் உள்ளது. இச்சத்துக்கள் இரைப்பைக் குடல் பாதையை சிறப்பாக உணர வைக்கும்.

எடையைக் குறைக்க நினைப்போரது டயட்டில் வாழைப்பழம் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இது வயிற்றை நிரப்புவதோடு, எளிதில் செரிமானமாகும். வாழைப்பழம் சாப்பிட்டால் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, இதில் உள்ள கார்போஹைட்ரேட் ஆற்றலாக மாற்றப்பட்டு, வயிற்றை நிரப்பும். இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். அதிலும் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்கள் போன்ற உடலின் ஆற்றலை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இத்தகைய பழத்தை காலை உணவாக ஒருவர் உட்கொண்டால், அது உடலுக்கு நல்ல ஆற்றலை கிடைக்கச் செய்வதோடு, மதிய உணவு வரை பசி எடுக்காமலும் பார்த்துக் கொள்ளும்.

நீங்கள் அடிக்கடி மனநிலையில் ஏற்றஇறக்கங்களை சந்திக்கிறீர்களா? வாழைப்பத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன், மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ளும். எப்படியெனில் வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோபேன் செரடோனினாக மாற்றப்படும். இந்த செரடோனின் என்னும் ஹார்மோன், மூளைக்கு சந்தோஷமான உணர்வை வழங்கும். இதன் மூலம் வாழைப்பழம் ஒருவரது மனநிலையை சிறப்பாக்கும். ஆகவே நல்ல மனநிலையில் ஒரு நாளைத் தொடங்க நினைத்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

வாழைப்பழம் பெண்கள் சந்திக்கும் PMS அறிகுறிகளைக் குறைக்கும். அதாவது வாழைப்பழம் ஒரு பெண் இறுதி மாதவிலக்கை நெருங்கும் முன் ஒருசில பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று தான் ஏற்றஇறக்க மனநிலை. இந்த நிலையைத் தவிர்க்க பெண்கள் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட, இந்த பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் ஏராளமான அளவில் இருக்கும். சில ஆய்வுகள் பொட்டாசியம், மூளையின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது என கூறுகிறது. ஆகவே வாழைப்பழத்தை உங்கள் குழந்தைகள் தேர்வு எழுத செல்வதற்கு முன் கொடுங்கள். இதனால் அவர்களது மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும்.

சிலருக்கு காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்தால், முகம், கண்கள் அல்லது பாதங்கள் வீங்கி காணப்படும். இப்படி வீக்கமடைவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற டயட் அல்லது பழக்கம் தான். ஆனால் ஒருவர் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உடனே வீக்கத்தைக் குறைத்துவிடும்.

இரத்த சோகை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் சிறப்பான உணவுப் பொருள் என்பது தெரியுமா? ஏனெனில் வாழைப்பழம் இரத்த சோகையை சரிசெய்யும் இரும்புச்சத்தை வழங்குகிறது. அதோடு, வாழைப்பழத்தில் உள்ள பி வைட்டமின்கள், இரத்த சிவப்பணுக் களின் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

வாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும். அதோடு, வாழைப்பழத்தில் வளமான அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இவை எலும்புகளை வலிமையாக்கத் தேவையான சத்துக்களாகும். ஆகவே உங்கள் எலும்புகளை வலிமையாக்க நினைத்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடுவதால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகள்:  இயற்கை ஆன்டாசிட் வயிற்று அல்சருக்கு நிவாரணம் அளிக்கும். உடல் சுத்தமாகும். தசை பிடிப்புகள் தடுக்கப்படும். சிறுநீரக புற்றுநோய் தடுக்கப்படும்.மஸ்குலர் திசு சிதைவு பிரச்னை தடுக்கப்படும். மெட்டபாலிசம் மேம்படும்.

வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடும் முன், அதனால் விளையும் பிரச்னைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா. அதில் ஒன்று தான் இது இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும். வாழைப்பழம் இனிப்பான ஓர் பழம் என்பது தெரியும். இதில் அதிகளவிலான புருக்டோஸ் உள்ளது.

இதனை பிரச்சனை இல்லாத ஆரோக்கியமானவர்கள் சாப்பிடலாம். ஆனால் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது.  தொகுப்பு: சங்கரமூர்த்தி...7373141119.

Top