logo
5 ஜி இணைய சேவை அளிக்கத் தயாராகியுள்ள  ஏர்டெல் நிறுவனம்...

5 ஜி இணைய சேவை அளிக்கத் தயாராகியுள்ள ஏர்டெல் நிறுவனம்...

09/Feb/2021 11:14:49

ஏர்டெல் நிறுவனம் 5 ஜி இணைய சேவை சோதனையில் வெற்றி பெற்று நாட்டில் முதன் முதலில் 5ஜி சேவையை அளிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. 

தொலைத்தொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல், வோடா போன் போன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக பல சலுகைகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.தற்போது இந்தியாவில் 5ஜி இணைய சேவையை கொண்டு வருவதற்கான சோதனைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் 5ஜி இணைய சேவையை ஹைதராபாத்தில் பரிசோதித்து அதில் வெற்றி கண்டுள்ளது. 

இதையடுத்து நாட்டில் முதன் முதலில் 5ஜி சேவையை அளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அத்துடன் தொலைத் தொடர்பு துறையின் அனுமதி கிடைத்தபின் உடனடியாக 5ஜி சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தெரிவித்தது.


இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் மிட்டல், இதற்காக அயராது பாடுபட்ட எங்களது பொறியாளர் குழுவுக்கு வாழ்த்துக்கள். டெக் சிட்டியான ஹைதராபாத்தில் இந்த சேவையை டெமோ செய்ததில் மகிழ்ச்சி. புதிய தொழில் நுட்பங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் ஏர்டெல் தான் முன்னோடி என்பதையும் நிரூபித்துள்ளோம் என தெரிவித்தார். 

5ஜி சேவை பரிசோதனையின் போது பயனாளிகள் ஒரு முழு நீள திரைப்படத்தை சில விநாடிகளில் டவுன்லோட் செய்துள்ளனர். முன்னதாக ஜியோ நிறுவனம் 2021-இன் பிற்பகுதியில் 5ஜி சேவை இந்தியாவில் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Top