logo
ஈரோட்டில் இதுவரை 3,656 பேருக்கு கொரோனா தடுப்பூசி :சுகாதாரத் துறையினர் தகவல்

ஈரோட்டில் இதுவரை 3,656 பேருக்கு கொரோனா தடுப்பூசி :சுகாதாரத் துறையினர் தகவல்

06/Feb/2021 10:58:32

ஈரோடு, பிப்:இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, பவானி, கோபி அரசு மருத்துவமனை சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16 ஆம் தேதி முதல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் மூன்று நாட்களுக்கு நூற்றுக்கும் கீழ் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. 

அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதலில் அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுதா, லோட்டஸ் ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டாவது கட்டமாக பிற துறைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அதன்படி வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதார துறை பணியாளர்கள்  கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து  கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரோட்டில் இரண்டு தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனா தடுப்பு ஊசி முன் கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் நேற்று வரை 3656 முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியான கோவிஷுல்டு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 168 முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தது. 

தற்போது அது பற்றிய அச்சம் விலகி உள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பிற  துறை முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோபி அரசு மருத்துவமனையில் நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதைப்போல் பவானி நகராட்சி பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றனர்.

Top