logo
     வேம்பு மற்றும் புங்கன் மரங்கள் நடவு செய்ய மானியம்

வேம்பு மற்றும் புங்கன் மரங்கள் நடவு செய்ய மானியம்

24/Sep/2020 11:27:44


எண்ணெய் வித்து மரப்பயிர்  சாகுபடி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21-ஆம் ஆண்டு வேம்பு மற்றும் புங்கன் மரப்பயிர்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.4.23 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளதாக

வேளாண்துறை அறிவித்துள்ளது.

 

புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் இராம. சிவகுமார் வெளியிட்ட தகவல்:எண்ணெய் வித்து மரப்பயிர்  சாகுபடி திட்டத்தின் கீழ் 5மீ ஒ 5 மீ இடைவெளியில் 400 வேப்பங்கன்றுகள் நடவு செய்வதற்கு ரூ.17,000- மும் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய ரூ.1000- மும் ஆக ஒரு எக்டருக்கு கூடுதல் மானியம் ரூ.18,000- விவசாயியின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.  அதே போல ஒரு எக்டரில் 5 மீ ஒ 4மீ இடைவெளியில் 500 புங்கன் கன்றுகள் நடவு செய்தால் ஊடுபயிர்; உளுந்து சாகுபடி உள்பட ரூ.21,000- மானியம் வழங்கப்படும்.  குழி எடுத்தல், உழவு செய்தல் நல்ல செழிப்பான ஒரு வருட கன்றுகள் வாங்கி நடவு செய்தல் ஊடுபயிர் சாகுபடி செய்தல் போன்ற அனைத்து பணிகளையும் விவசாயி சொந்த செலவில் மேற்கொண்டபின்  களப்பணியாளரது பரிந்துரையுடன் மானியம் கோர வேண்டும்.


மேலும்,இந்த திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் (2017-18, 2018-19 மற்றும் 2019-20) வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.2,000-ம் மற்றும் ஊடுபயிர் உளுந்து சாகுபடிக்கு ரூ.1000-  என  எக்டருக்கு ரூ.3,000 -மும் பின்னேற்பு மானியமாக அந்தந்த விவசாயிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே  விருப்பமுள்ள விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் பரிந்துரையுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகி பயன்பெறலாம்.


Top