03/Feb/2021 05:41:43
புதுக்கோட்டை, பிப்: 32 -ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பேரணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சேதுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி வழியாக மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது.
இந்த பேரணியில் தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்ட மாட்டேன் ஓட்டவும் அனுமதிக்க மாட்டேன். சீட் பெல்ட் போடாமல் நான்கு சக்கர வாகனம் ஓட்ட மாட்டேன். முன் செல்லும் வாகனங்களுக்கு 10 மீட்டர் இடைவெளி விட்டு செல்வேன். மோட்டார் வாகனங்களை ஓட்டும்போது கைபேசி உபயோகிக்க மாட்டேன்.
குடிபோதையில் வாகனங்களை இயக்க மாட்டேன் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்