logo
கொரோனா அச்சுறுத்தல்: ஈரோடு மாட்டுச் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் குறைந்துபோன விற்பனை

கொரோனா அச்சுறுத்தல்: ஈரோடு மாட்டுச் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் குறைந்துபோன விற்பனை

09/Apr/2021 06:09:42

ஈரோடு, ஏப்: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாமநிலங்ளிலிருந்து வியாபாரிகள் வராததால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது.


ஈரோடு கருங்கல் பாளையத்தில்  வாரம்தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை களில் மாட்டுச்சந்தை  நடைபெறும். இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாட்டுச்சந்தை யாகத்திகழ்கிறது. வழக்கம் போல வியாழக்கிழமை  நடைபெற்ற சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதை பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


இந்த நிலையில் ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 375 பசு மாடுகளும், 225 எருமை மாடுகளும் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

இதில் எருமை மாடு  ரூ.30 ஆயிரம் முதல்  ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. பசுமாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்பனையானது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம்  கர்நாடகம், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர்.

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, கொரோனா  பரவல் அதிகரிப்பால் மகாராஷ் டிரம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. மேலும் மற்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் குறைந்த அளவே வந்திருந்ததால் மாடுகள் விற்பனை மந்தமானது. சந்தைக்கு  கொண்டுவரப்பட்ட மாடுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாகவே விற்பனையானது என்றனர். 


Top