logo
கோமா நிலையில் விபத்தில் காயமடைந்த மகன்: இழப்பீடு கோரி பெற்றோர் மனு.

கோமா நிலையில் விபத்தில் காயமடைந்த மகன்: இழப்பீடு கோரி பெற்றோர் மனு.

23/Sep/2020 06:45:08

விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ள மகனுக்கு மருத்துவ செலவுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமென அவரது பெற்றோர் ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர்.

  தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர்  மனைவியுடன் ஈரோடு எஸ் பி அலுவலகத்திற்கு  வந்த அவர் எஸ்பியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பது: எனது  மகன் கோவிந்தராஜ் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு ஈரோடு அருகே சூளையில்  இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் தற்போது கோமா நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ செலவு இதுவரை ரூ.50 லட்சம் வரை மருத்துவ செலவு செய்துவிட்டோம்.எனவே விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுத்து, உரிய  இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Top