logo
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பாரம்பரிய உணவு வகைகளைப் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பாரம்பரிய உணவு வகைகளைப் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி

03/Jan/2021 10:19:36

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இலவச சித்த மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மூலிகை கண்காட்சியினை பார்வையிட்ட. பின்னர் அவர் மேலும் பேசியதாவது:

சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 4-ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

இதில் இலவச சித்த மருத்துவ முகாம் தொடக்கி வைக்கப்பட்டதுடன் மருத்துவ குணம் அடங்கிய பல்வேறு மூலிகைகள் கொண்ட மூலிகை கண்காட்சியும், பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. 

சித்த மருத்துவத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. இதே போன்று கொரோனா பெருந்தொற்று காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர்.

கொரோனா சித்த மருத்துவ சிகிச்சையில் எண்ணற்ற பொது மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறைகள் குறித்து பொது மக்கள் பாராட்டு தெரிவித்ததுடன் இதன் பயனாக சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்தும் அனைவரும் அறிந்து கொண்டனர். நல்ல முறையில் கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும் நவீன கால வாழ்க்கை முறைகளில் பொதுமக்கள் நமது பாரம்பாpய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு  நன்மை தரும் பாரம்பாpய உணவுகளான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற  பல்வேறு உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். இதனால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற நல்வாழ்வு வாழ முடியும் என்றார் ஆட்சியர்.

இதில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல்கதீஜா, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மகியலூயிஸ் பெக்கி ஹோம்ஸ், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Top