logo
செப்.29 -இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம்

செப்.29 -இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு முகாம்

23/Sep/2020 01:51:52

புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதாந்திர குறைகேட்பு முகாம் வரும் 29-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:  கொரோனா  ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச்-2020 மாதம் முதல் ஆகஸ்டு-2020 மாதம் வரை மாதாந்திர குறை தீர்க்கும் முகாம்கள்  நடத்தப்படவில்லை.தற்போது நோய் பரவல் பெருமளவில் தடுக்கப்பட்டதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு உருளை சிலிண்டர் பதிவு செய்வதில் பெறுவதில் உள்ள சிரமங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில்  ஏற்படும் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து பெறப்படும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து தொடர்புடைய எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த இக்குறை கேட்பு முகாம் நடத்தப்படவுள்ளது.      புதுக்கோட்டை மாவட்டத்தில்செப்டம்பர் மாதத்துக்கான  குறைகேட்பு முகாம் வரும் 29.09.2020 (செவ்வாய்க்கிழமை)  மாலை 4.30  மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா; தலைமையில் நடைபெறும். எனவே இந்த முகாம் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக தெரிவித்து பயன் பெறலாம். 


Top