logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  புரெவி புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் கள  ஆய்வு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புரெவி புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் கள ஆய்வு.

30/Dec/2020 07:45:15

புதுக்கோட்டை, டிச: புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் (29.12.2020) புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அண்மையில் ஏற்பட்ட புரெவி புயலின் போது  பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழகம் வந்துள்ள 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில்  நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். 

இக்குழுவில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் அசுடோஷ் அக்னிஹோத்ரி  மத்திய வேளாண்மை துறை அமைச்சக இயக்குனர் டாக்டர் மனோகரன்,  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மண்டல அலுவலர்.ரனன்ஜெய் சிங்,  மத்திய நிதித்துறை அமைச்சகம் துணை இயக்குனாஅமித் குமார்,  மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குனர் சுபம் கார்க்,  மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக உதவி ஆணையர் மோகித் ராம்,  மத்திய மீன்வள துறை ஆணையர் டாக்டர் பால் பாண்டியன், மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் ஜெ ஹர்ஷா ஆகியோர் அடங்கிய 8 அலுவலர்கள் குழு வந்திருந்தனர். 

இந்த மத்திய குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், கத்தக்குறிச்சி ஊராட்சி, நம்புகுழி கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிர்களையும், தெட்சினாபுரம் கிராமத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோன்று பயிர் சேத பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களிடமும் மத்திய குழுவினர் விளக்கமாக கேட்டறிந்தனர். மேலும் பயிர் சேத விவரங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி மூலமும் விளக்கப்பட்டது.

 இந்த ஆய்வின் போது,  அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திரரெட்டி,  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி,  வேளாண்துறை கூடுதல் இயக்குநர் (சென்னை) கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வேளாண் இணை இயக்குநா; சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், துணை இயக்குநர் பெரியசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்  உடனிருந்தனர். 


Top