logo
சசிகலா இணைப்பு குறித்து எனக்கு தெரியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சசிகலா இணைப்பு குறித்து எனக்கு தெரியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

23/Sep/2020 12:11:42

 தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க தற்போது நிலை இல்லை. வேளாண் மசோதா குறித்து முதலமைச்சர் விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துச் செல்வோம். அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து தனக்கு தெரியாது, நான் ஒரு சாதாரண தொண்டன். அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா? எப்பொழுது கோட்டையில் நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது. ஊரெங்கும் ஒரே பேச்சு 2021-இல் அம்மாவின் ஆட்சி என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். 


Top