logo
ஒரே நாளில்  ரூ.80 கோடி வசூல்: ரூ.50 லட்சம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனை

ஒரே நாளில் ரூ.80 கோடி வசூல்: ரூ.50 லட்சம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனை

26/Dec/2020 10:35:34

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வசூல் ஒரே நாளில் ரூ.80 கோடியைக் கடந்தது புதிய சாதனை படைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வசூல் ஒரே நாளில் ரூ.80 கோடியைக் கடந்தது புதிய சாதனை படைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் பாஸ்ட்டேக் கட்டாயம் என்பது நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இந்தச் சாதனை கவனிக்கத்தக்கது.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. அதில், சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் வசூல் டிசம்பர் 24-ஆம் தேதி அன்று முதல் முறையாக ரூ.80 லட்சத்தைக் கடந்தது. அன்றைய தினம் வரலாற்று சாதனையாக மொத்த 50 லட்சம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

நெடுஞ்சாலைகளில், ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2.20 கோடி பாஸ்ட்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், பாஸ்ட்டேக் பயன்படுத்துவது கட்டாயமாகிறது. இதற்காக, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டுள்ளது

Top