26/Dec/2020 08:07:58
ஈரோடு, டிச: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96-ஆவது அமைப்பு நாளையொட்டி சனிக்கிழமை (26.12.2020) கொடியேற்றுவிழா நடைபெற்றது.
ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் மாவட்டப் பொருளாளர் எஸ்.டி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மூத்த உறுப்பினர் மாலி (எ) எஸ்.மகாலிங்கம் பங்கேற்று அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கட்சியின் வட்டாரச் செயலாளர் டி.சோமசுந்தரம், வட்டாரப் பொருளாளர் என்.ரமணி, மாணிக்கம்பாளையம் கிளைச் செயலாளர் பி.மகேஷ், வெட்டுக்காட்டுவலசு கிளைச் செயலாளர் எம்.சுந்தரராஜ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வட்டார அமைப்பாளர் சி.மணிராஜ், ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க தெற்கு மாவட்டச் செயலாளர் சி.சுந்தரம், ஏஐடியுசி வார்ப்பிங் சைசிங் தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் பி.மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்