logo

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

23/Sep/2020 09:48:24

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் சரகத்தில் கடந்த 14.8.2020- இல்செங்கலாக்குடி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஸ்டீல் கம்பெனியில் திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்த ரகுமான் (எ) அக்பர் உசைன்

என்பவரை பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாத்தூர் காவல் நிலையத்தில்  கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட

எதிரிகள் திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த அ.அபுதாகீர்(32). ச.முகமது ரசீத்(32) ஆகிய இருவரும் மாவட்ட புதுக்கோட்டை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜிசரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியின் ஆணைப்படி குண்டர் தடுப்புச்சட்டத்தில்  நடவடிக்கை எடுக்கப்பட்டு 22.09.20- அன்று திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

          

Top