23/Apr/2021 05:54:12
ஈரோடு, ஏப்: ரயில்வே நிர்வாகம் தனக்கு தர வேண்டிய நிலுவை தொகையை வழங்கக்கோரி் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே ஒப்பந்ததாரர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
அருகே ரயில்வே நிர்வாகம் தனக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று சுவரொட்டியையும் ஒட்டிவைத்திருந்தார். இதனால் ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று துரைகண்ணுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்பு எனது பணிகளை நான் முடித்து விட்டேன். 20 பணியா ளர்கள் வைத்து இந்த ஒப்பந்த பணிகளை செய்து வந்தேன். ரூ 60 லட்சம் நிலுவை தொகை யை கொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.
இதனால் என்னிடம் வேலை
பார்த்த தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. எனது
குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஆகவே நிலுவைத் தொகை
கிடைக் கும் வரை உண்ணாநிலை போராட்டத்தை கைவிட
மாட்டேன் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.