logo
புதுக்கோட்டையில் தேசிய போட்டிக்கு சிலம்பாட்ட வீரர்கள் தேர்வு

புதுக்கோட்டையில் தேசிய போட்டிக்கு சிலம்பாட்ட வீரர்கள் தேர்வு

23/Sep/2020 07:20:17

  புதுக்கோட்டையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம்  சிலம்பாட்டக்கழகத்தால்  தேசிய சிலம்பாட்ட போட்டிக்கு   சிலம்பாட்ட  வீரர்கள் தேர்வு  செய்யப்பட்டனர். இவர்களுக்கு பாராட்டும்,  இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் வழங்கிய விளையாட்டு உபகரணங்கள்  வழங்கும்  நிகழ்ச்சி  சத்தியம்  ஹோட்டலில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு,  தலைவர் ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் ஏ.சத்தியமூர்த்தி வரவேற்றார்.   மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் அந்தோணிஅதிஷ்டராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகுதி பெற்ற   சிலம்பாட்ட புதுக்கோட்டை மாவட்ட  வீரர்கள், திருச்சி தஞ்சை ,சிவகங்கை மாவட்ட  வீரர்கள் உள்பய 17 பேருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் வழங்கிய விளையாட்டு உபகரணங்களை  வழங்கி வாழ்த்திப் பேசினார் நடுவர்கள் அந்தோணிராஜ், சிவகங்கை வினோத் நாகராஜ்,இருதயராஜ், யோகேஷ்,  சதீஷ்குமார்  உள்ளிட்டோர்கலந்து கொண்டனர் இணை செயலாளர்  மாமல்லன் செந்தில் நன்றி கூறினார்.   


Top