logo
மின்வாரியத்துக்கு தனியார் மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

மின்வாரியத்துக்கு தனியார் மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

21/Dec/2020 06:28:57

சென்னை, டிச: தமிழக மின்வாரியத்துக்கு தனியார் மூலம் 30 ஆயிரம் பேரை நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

தனியார் மூலம் பணிநியமனம் செய்யும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதேவேளையில் மின் வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கை, தொழிற்சங்க நிர்வாகிகள் நாளையே திரும்பப் பெற்றால், மின்வாரியத்தில் உடனடியாக 10 ஆயிரம் பேர் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை தனியார் மூலம் ஒப்பந்த ஊழியா்களாக நிரப்புவது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு மின்வாரியம் ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழக மின்வாரியத்துக்கு தனியார் மூலம் 30 ஆயிரம் பேரை நியமிக்கும் உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, தொழிற்சங்கங்கள் திரும்பப் பெற்றால், ஐந்து நாள்களுக்குள் 10 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

போராடும் மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள். அவர்களது நோக்கம்தான் என்ன. போராட்டம் நடத்திக் கொண்டிருக்காமல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் அமைச்சர் தங்கமணி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியம் ஒரு போதும் தனியார் மயமாகாது என்றும், தமிழக மின்வாரியத்தில் தொடர்ந்து வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.முன்னதாக, தனியார் ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பாக பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளா் ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்த உத்தரவில், மின் பகிா்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம் மின் நுகா்வோருக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்த ஊழியா்கள் மூலமாக மேற்கொள்வது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தமானது ஒரே தவணைத் தொகை செலுத்துவதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். விதி மற்றும் நிபந்தனைக்கு உடன்பட்டால் மேலும் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம். இந்த ஒப்பந்தப்புள்ளியை சம்பந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளா் உறுதி செய்வாா்.

பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட ஊழியா் நலன் சாா்ந்த விஷயங்களோடு, ரூ.1 கோடி 80 லட்சத்து 88 ஆயிரம் என இதற்கான தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.தனியார் மூலம் பணியமர்த்தப்படும் இந்த உத்தரவுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பும், கண்டனமும் எழுந்திருந்த நிலையில், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Top