logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 817 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 817 பேருக்கு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை

22/Sep/2020 12:24:45

புதுக்கோட்டை மாவட்டத்தில்  21.09.2020 -அன்று  புதிதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மொத்த பாதிப்பு 8,254. குணமடைந்து வீடு திரும்பியோர் 7,313. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் 817. உயிரிழப்பு 124.

தமிழகத்தில் இதுவரை  கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு:

 தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,52,674 பேராக உயர்ந்துள்ளது..தமிழகத்தில் புதன் அன்று   82,928 பேருக்கும், இதுவரை 64,36,700 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று 76 பேர் உள்பட, மொத்தம் 8,947 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று 5,406 பேர் உள்பட, இதுவரை 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46,350. இதுவரை, தமிழகத்தில் 89.99 % குணமடைந்துள்ளனர் சென்னையில் 989 பேர் உள்பட மொத்தம் 1,57,614 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10,012 என்று  தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Top