22/Sep/2020 10:48:02
புதுக்கோட்டையில் கடந்த வருடம் தமிழக அரசின் சிறைத் துறை சார்பில் சிறைவாசிகள் பணி செய்யும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது அதேபோன்று புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் 20 பணியாளர்களும் ஆயுள் தண்டனைக் கைதிகள் ஆவார்கள்.
இதனை புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் சிறைதுறை காவலர்கள் இவர்களை கண்காணித்து வருகின்றனர். இதனிடையே. நேற்று புதுக்கோட்டை கட்டிய வயல் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது காருக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இங்கு வந்தார். அப்போது சரவணன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் எடையுள்ள ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி எதிர்பாராத விதநாக அறுந்து கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் சரவணன் எரிபொருளை நிரப்பி விட்டு சென்றுவிட்டார் அப்போது அங்கு பணியில் இருந்த சிறைவாசியான பெட்ரோல் பங்க் ஊழியர் கிறிஸ்து ஆரோக்கியராஜ் கீழே கிடந்த தங்கச் சங்கிலியை கண்டடெடுத்து பெட்ரோல் பங்கு அலுவலர் விஜயகுமார் மற்றும் உதவி சிறை அலுவலர் பாலமுருகன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த சங்கிலி புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி யிடம் ஒப்படைக்கப்பட்டது இந்நிலையில், தங்கச் சங்கிலியைத் தொலைத்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணன் இங்கு தேடி வந்தார். அவரிடம் நகை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் விசாரணை செய்து இன்று புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி சரவணன் மற்றும் அவரது மனைவியிடம் தங்கச்சங்கிலியை ஒப்படைத்தார் தவறி விழுந்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு எடுத்த ஒப்படைத்த பெட்ரோல் பங்க் ஊழியர் சிறைவாசி கிறிஸ்து ஆரோக்கியராஜ் - ஐ புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார். அதேபோல், கடந்த வருடம் இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்தபோது ஒன்றரை லட்சம் பணத்தை தவற விட்டுச் சென்ற நபரிடம் இங்கு பணிபுரியும் சிறைவாசிகள் அந்தப் பணப்பையை எடுத்து இதேபோல் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது .