logo
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் விநியோகம்

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் விநியோகம்

20/Apr/2021 12:20:57

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை  கலைஞர் தமிழ்ச்சங்கம்  சார்பில் மச்சுவாடி பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை  முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரானா தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொது மக்களுக்கு முக கவசம் கபசூர குடிநீர் கிருமி நாசினி ஆகியவற்றை  வழங்கி வருகின்றனர். 


இந்நிலையில், திமுத தலைவர் மு,க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில் புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம்  சார்பில் புதுக்கோட்டை நகர மக்களுக்கு 15 நாள்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கும் முகாமை   அதன் நிறுவனர், செயலாளர் த. சந்திரசேகரன்   கடந்த 14.4.2011 -ஆம் தேதி புதுக்கோட்டை மாட்டுச்சந்தை பகுதியில் தொடங்கி வைத்தார்.  

அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இந்த முகாம் நடைபெற்றது.  7-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை  புதுக்கோட்டை மச்சுவாடி சரவணா திரையரங்கம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில்   கலைஞர் தமிழ்ச்சங்க நிறுவனர்  த. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் முககவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.


இதில், நிர்வாகிகள் அரு. வீரமணி, அஞ்சுகா மீனாட்சிசுந்தரம், ராம. செல்வராஜ், சுப. சரவணன், அசோக்பாண்டியன், பெ. ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணன், எம்.வேலுச்சாமி, கே. ராஜேந்திரன், ராய. முத்துக்குமார்,  இதயம்அப்துல்லா, க.சண்முகம், சி. மதியழகன்,  வாகவாசல் நாகராஜ். கோ. கலையரசன்.

நந்தினிரெங்கராஜ், தரணிரமேஷ், டி.ஆர். குமார், ரபீக், முனைவர் ரமேஷ், கலை இலக்கிய பேரவை நிர்வாகிகள் சிஇஓ. பரமசிவம், தயாளன், மணிமாறன், கே. சந்திரசேகரன், ரவீஸ்ரவி, பூக்கடை முருகேசன், எஸ். ரமேஷ், பா. ராமகிருஷ்ணன், என். நாகரெத்தினம், சண்முகராஜா, முகிலன், புகழேந்தி, தாஜுதீன், வேம்பை சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Top