logo

வேலை வாய்ப்பு செய்திகள்...

21/Sep/2020 12:30:48

இரயில்வே துறையில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி


இந்திய இரயில்வே துறைக்கு சொந்தமான இரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிக்கு தற்போது ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகுதியுள்ளோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சிக்கான கல்வித்தகுதி- 10th,  12th,  ITI படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த இடங்கள்: 990. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி- 25-09-2020 மாலை 5.30 வரை..

மேலும் விவரங்களை... https://pbicf.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


 தமிழக காவல் துறைக்கு ஆட்கள் தேர்வு:


தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விவரங்களை tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம்; 10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13-இல் எழுத்துத்தேர்வு  நடத்தப்படுமென தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது.


Top