logo
புதுக்கோட்டை ஓயாத அலைகள் அறநிலையம்  சார்பில்  ஆதரவற்ற ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கல்

புதுக்கோட்டை ஓயாத அலைகள் அறநிலையம் சார்பில் ஆதரவற்ற ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கல்

06/Jun/2021 11:34:51

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டையில்  மறைந்த சமூக ஆர்வலர் அருண்மொழியின்  நினைவாக தொடங்கப்பட்டுள்ள ஓயாத அலைகள் அறநிலையம் சார்பாக ஆதரவற்ற ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த அறநிலையம் சார்பில்   17-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற   சாலை யோரம் வசிக்கக்கூடிய ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் நிகழ்வில்  சிறப்பு விருந்தி னராக சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி  மோகன்ராஜ்,  பொறியாளர் கார்த்திக் தமிழரசன் ஆகியோர்  உணவுகளை வழங்கினர். 

இதில்,  ஓயாத அலைகள் அறநிலைய  நிர்வாக அறங்காவலர் கோ.கண்ணன் ,சையது இப்ராகீம் ,பரமன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Top