logo
அரசின் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 ஊராட்சிகள் தேர்வு- கலெக்டர் தகவல்

அரசின் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 ஊராட்சிகள் தேர்வு- கலெக்டர் தகவல்

21/Sep/2020 11:37:04

புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்துக்கு 50 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி: புதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள்ள் வழங்கும் திட்டத்தின்கீழ், ராங்கியன்விடுதி, தாயினிபட்டி, பி.உசிலம்பட்டி, ஏனாதி, புதுப்பட்டி, கண்ணங்குடி, நம்புராண்பட்டி மற்றும் கல்லுக்காரன்பட்டி ஆகிய 8 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ், மாங்குடி, அரசர்குளம கீழ்பாதி, மேல்நிலைவயல், பொன்னமங்கலம், நடுப்பட்டி, மருதன்கோன்விடுதி,ஒடுக்கூர், கோவனூர், முள்ளூர், திருமயம்-மேலூர் குப்பக்குடி, ஆலங்குடி, மதியநல்லூர், மண்ணக்குடி, மிரட்டுநிலை, பொன்பேத்தி, முதலிப்பட்டி, பள்ளத்துப்பட்டி, எம்.உசிலம்பட்டி, பெருங்களூர், மிதிலைப்பட்டி, எல்.என்.புரம், மாத்தூர், அன்னவாசல்-மேலூர், மரமடக்கி, முனசந்தை, பூவளூர் நத்தமாடிப்பட்டி, முள்ளங்குறிச்சி, பாப்புடையான்பட்டி, மறவாமதுரை, பெருங்கொண்டான்விடுதி, நச்சாந்துபட்டி, மாங்காடு, மேபூதகுடி, முக்கணாமலைப்பட்டி, மேலபட்டு, நல்லாம்பாள்சமுத்திரம், நெப்புகை, ஓடப்பவிடுதி, பெரம்பூர்  மற்றும் மேலமேல்நிலை ஆகிய 42 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டங்களுக்கு முதல் சிறப்பு கிராம சபைக் கூட்டம் 24.09.2020,  25.09.2020 ஆகிய தேதிகளில் நடத்திடவும், அதனைத் தொடா;ந்து 2-வது சிறப்பு கிராம சபாக்கூட்டம்  2.10.2020,   5.10.2020 ஆகிய தேதிகளில்  நடத்தி பயனாளிகள் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம்என்று மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். 


Top