logo
தஞ்சை அருகே உயர் மின் அழுத்த கம்பியில் தனியார் பேருந்து உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பயணிகள்  பலி

தஞ்சை அருகே உயர் மின் அழுத்த கம்பியில் தனியார் பேருந்து உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 பயணிகள் பலி

12/Jan/2021 07:18:20

தஞ்சை: தஞ்சை மாவட்டம், கண்டியூர் அருகே தனியார் பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.  மேலும்  10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 3 பேர் கவலைகிடமாக உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் தனியார் பேருந்து உயரழுந்த மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து நேரிட்டுள்ளது. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரையில் கனநாதன் என்னும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது.

வழக்கமாக, செல்லும் வழித்தடத்தில் சென்று கொண்டிருக்கும் போது, வரகூர் அருகே முன்னாள் சென்ற லாரி ஒன்றை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலையின் பக்கவாட்டில் விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கியதால் தடுமாறிய பேருந்து மீது மேலே இருந்த மின்கம்பி உரசியதாக தெரிகிறது.

இதனால், மின் அழுத்த கம்பியில் இருந்து பேருந்திற்கு மின்சாரம் பாய்ந்ததில், பேருந்தில் பயணித்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்ப்பிக்க போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்தவர் களின் சடலங்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட தகவலின் படி, பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Top