logo
கொரோனா நிவாரண நிதியை கடனுக்கு வரவு வைத்த வங்கி நிர்வாகம்: நரிக்குறவர்கள் தர்ணா.

கொரோனா நிவாரண நிதியை கடனுக்கு வரவு வைத்த வங்கி நிர்வாகம்: நரிக்குறவர்கள் தர்ணா.

30/May/2020 12:39:04

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில், அரசு வழங்கிய கொரோனா நிவாரன நிதியை பழைய கடனுக்கு வரவு வைத்துக் கொண்ட வங்கி கிளையை கண்டித்து நரிக்குறவர் இனமக்கள் வெள்ளிக்கிழமை தர்ணாவில் ஈடுபட்டனர்.

  கீரமங்கலம் அறிவொளி நகரில் வசித்துவரும் நரிக்குறவர் இனமக்கள், அரசு வழங்கிய ரூ. 2 ஆயிரம் நிவாரண நிதியை எடுக்க கீரமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை, அவர்கள் பெற்ற பழைய கடனுக்கு வரவு வைத்து விட்டதாக வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த நிலையில், வங்கி அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கையால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வங்கி நிர்வாகத்தை கண்டித்து  தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கொரோனா நிவாரண நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Top