logo
சட்டப்பேரவை தேர்தல்: புதுக்கோட்டையில் ஊடக கண்காணிப்புக்குழு மையம் திறப்பு

சட்டப்பேரவை தேர்தல்: புதுக்கோட்டையில் ஊடக கண்காணிப்புக்குழு மையம் திறப்பு

02/Mar/2021 11:59:03

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையத்தினை மாவட்ட தோ;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி செவ்வாய்க்கிழமை   திறந்து வைத்து  பார்வையிட்டார்.


பினனர்  அவர் கூறியதாவது:சட்டமன்ற பொது தோ;தல் தமிழகத்தில் 6.4.2021 அன்று நடைபெறவுள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள்  அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக மையம், ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

 

இம்மையத்தில் தோ;தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி தொலைக்காட்சிகள், வீடியோ பதிவுக் கருவி, கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தோ;தல் குறித்த அரசியல் கட்சியினரின்  விளம்பரங்கள் மற்றும் ஏதேனும் விதிமீறல்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்தல் விவரங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள 04322-221627 என்ற தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Top