logo
வீடுகளுக்குள் மழை நீர் புகாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு

வீடுகளுக்குள் மழை நீர் புகாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு

25/Nov/2020 05:12:55

ஈரோடு:  ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புயலால் பாதிக்கப்படும் இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறைகள் இணைந்து எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்சி. கதிரவன் மற்றும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

 கீரிப்பள்ளம் ஓடையை தூர் வாரும் பணியையும் பார்வையிட்டு வீடுகளுக்குள் மழை நீர் புகாமல் தடுக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்  குறித்து ஆலோசனையும் மேற்கொண்டனர். 

அதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிவர் புயல் சேதம் ஏற்படுத்தும் முன்பே எச்சரிக்கை நடவடிக்கையாக சேதங்கள் ஏற்படக்கூடம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் அறிவுரை வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க பணிகள் மேற்கொள்ளப்படுள்ளது.

 628.3 மில்லியன் தண்ணீர் தான் உள்ளது நமக்கு தேவை 717 மில்லியன் தண்ணீர் ஆகும். அதற்கு தேவையான வாய்க்கால்கள் ஓடைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  5 நாட்கள் மழை பெய்தாலும் மக்களை பேணிக்காக்க வருவாய்துறை உள்ளாட்சித்துறை மக்கள் நல்வாழ்த்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

 கோபிசெட்டிபாளையம் கீரிப்பள்ளம் ஓடையில் கூடுதலாக மழை பெய்யும் போது பல நேங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்காக முதல்வர் நிதிகளை வழங்கியுள்ளார். இனிமேல் எவ்வளவு மழை பெய்தாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.11.5 கோடி நிதிகள் ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அரசுனுடைய தொலைநோக்கு சிந்தனை என்பது புயல் வருகிறது என்று சொன்னவுடனேயே அதற்கான ஆயத்தபணிகளை  நமது முதல்வர் நேரடியாகவே சென்று அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் நம்முடைய மாநிலம் மற்ற மாநிலங்களை போல அல்லாமல் வெள்ளச்சேதத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படாதளவிற்கு  முதல்வர் அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டுள்ளார். புயலை விட  வேகமாக பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 புயல்பாதிக்கும் பகுதிகளுக்கு கல்வி தொலைக்காட்சிகள் மூலம் பாடம் கற்பிக்கப்டுமா என்ற கேள்விக்கு தற்போது புயல் பாதிக்கும் பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும் அப்போது கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் தடைபடும் மற்ற நேரங்களில் தொடர்ந்து நடைபெறும். 

பொதுமக்களை பாதுகாக்க ஈரோடுமாவட்டத்தில் 95 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேவையெனில் அவ்விடங்கள் பயன்படுத்தப்படும். 50 ஆயிரம் பேர்கள் தங்குதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏரி குளங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்துறையும் பொதுப்பணித்துறையும் கண்காணித்து வருகின்றனர். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை பாதிப்புகள் ஏற்படாது. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளச்சேதமும் வராது நிலநடுக்கமும் வராது புயலும் வருவதில்லை எனவே  பொதுமக்கள் கவலைப்படதேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Top