logo
அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற  விண்ணப்பிக்கலாம்

அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

23/Nov/2020 10:13:01

புதுக்கோட்டை:   புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்:    அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ்; புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020 -21 -ஆம் ஆண்டிற்கு 2334 உழைக்கும் மகளிருக்கு வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2020 - 21 -ஆம் ஆண்டுக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் மகளிர்  பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இரு சக்கர வாகனங்கள் வாங்கிட நகரப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கீழ்காணும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

கல்வித் தகுதி 5 -ஆம் வகுப்பு, வயது 18 முதல் 45 வயது வரை, ஆண்டு வருமானம் ரூ.2.50  லட்சத்திற்குள், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும், ஆதரவற்ற விதவை, மகளிரை குடும்பத் தலைவராக கொண்டவா;கள், கணவரால் கைவிடப்பட்டவா;கள், மாற்றுத்திறனாளிகள், திருமணம் ஆகாத 35 வயதுக்கு மேற்பட்ட முதிh; கன்னிகள், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், திருநங்கைகள் போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத, தனியாh; நிறுவனங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய சுகாதார பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், ஒத்த தொழில் குழுவில் பணிபுரிந்து வாழ்வாதார செயல்பாடுகளில் தொடார்ந்து ஈடுபடுவோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்போர் வயது சான்றிதழ், புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்) இருப்பிடச் சான்று, (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது) இரு சக்கரவாகன ஓட்டுனர் உரிமம்,  வருமான சான்று (தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறைத் தலைவர்- சுய சான்று) வேலை பார்ப்பதற்கான பணி சான்று தொடர்புடைய நிறுவன துறை தலைவரால் வழங்கப்பட்ட ஊதிய சான்று, தினக் கூலி அடிப்படையில் பணிபுரிபவராக இருந்தால்  சொசைட்டியில் இருந்து சான்று, ஆதார் அட்டை,  8 -ஆம் வகுப்புக்கான கல்விச் சான்று, மாற்று சான்றிதழ் முன்னுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். சாதி சான்று மாற்றுத்திறனாளியெனில் தேசிய அடையாள அட்டை. இருசக்கர வாகனத்திற்கான விலைப்புள்ளி இரு சக்கர வாகனத்திற்கான 125 சிசி-க்கு உட்பட்ட திறன் கொண்ட வாகனம் மட்டுமே வாங்கப்படவேண்டும்.

 இத்திட்டத்தில் 50 சதவீத மானியம் அதிகபட்சம்  ரூ..25,000 அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்திக் கொள்ள வேண்டியது. மகளிh; மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம்  ரூ.31,250 வழங்கப்படும். பேரூராட்சிப் பகுதியெனில் பேரூராட்சி செயல் அலுவலரிடமும் - நகராட்சி எனில் சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடமும் ஊரகப் பகுதி எனில் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகியோரிடமும் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன்  தொடர்புடைய அலுவலரிடம்  சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பித்த நபா;களுக்கு அரசு விதி முறைகள் மற்றும் கள ஆய்வு அடிப்படையில் பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..


Top