logo
தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா : 3 பேர் பலி

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா : 3 பேர் பலி

13/May/2020 11:45:40

தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9, 227 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 6, 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும்,  பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2176 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.


Top