logo
தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து  அரங்கேற்றம் செய்ய நிதியளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து அரங்கேற்றம் செய்ய நிதியளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

05/Nov/2020 10:07:25

புதுக்கோட்டை: தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து அரங்கேற்றம் செய்ய நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

 திருச்சிராப்பள்ளி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் (பொ)  பா.ஹேமநாதன் வெளியிட்ட தகவல்:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்கை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ரூ. 75,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.   இத் திட்டத்தின்கீழ் 2019-2020 -ஆம் ஆண்டுக்கான தமிழில் புதிய நாட்டிய-நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள், கலைக்குழுக்கள், கலை நிறுவனங்கள் விண்ணப்பப்படிவம் பெறவும் நிபந்தனைகள் பற்றித் தெரிந்து கொள்ளவும் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும் 30.11.2020-ஆம் தேதி மாலை 5  -மணிக்குள் உறுப்பினர், செயலாளர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600 028. தொலைபேசி எண்: 044-24937471, மின்னஞ்சல்-tneinm@gmail.com, tneinm@tn.gov.in <mailto:tneinm@tn.gov.in>  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Top