logo
கோவில்களில் இரவு நேர காவலர்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கோவில்களில் இரவு நேர காவலர்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

05/Nov/2020 07:20:52

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில்  இரவு நேர காவலர் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 22 கோவில்களில் காலியாகவுள்ள இரவு நேர காவலர் பணியிடங்கள் முன்னாள் படைவீரர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு 62-வயதிற்கு  உட்பட்டவர்களாகவும், திடகாத்திரம் உள்ளவர்களாகவும் இருக்கும்  விருப்பம்   உள்ள  முன்னாள்  படைவீரர்கள்  தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரா; நல உதவி இயக்குநா;  அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம்;.

மேலும் தொகுப்பூதியமாக ரூ.8000 வழங்கப்படும். தேவையான விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Top