logo
உரங்களை அதிக விலைக்கு விற்றால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

உரங்களை அதிக விலைக்கு விற்றால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

05/Nov/2020 07:03:15

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என  மாவட்ட ஆட்சியர் பி. உமாமேஸ்வரி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  எனவே, சம்பா நெல் சாகுபடி மற்றும் மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிh;களுக்குத் தேவையான உரங்கள் தனியாh; மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்குத் தடையின்றிக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு விநியோகம் நடைபெறுகிறது.  

 தற்போது மாவட்டத்தில் 3,756 மெட்ரிக் டன் யூரியா, 1,006 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 2,574 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 4,685 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.உர விற்பனையாளர்கள்  விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்திட வேண்டும்.

 மொத்த விற்பனையாளா;கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை உhpமம் இன்றி உரம் விற்பனை செய்தால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையினைக் கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் நாள்தோறும் பராமரிக்க வேண்டும்.

 உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். உர வரவு மற்றும் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.

 விவசாயிகள் மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டவாறு உரங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.  இதனால் உரச்செலவைக் குறைக்கலாம். உரங்கள் விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்யப்படுவதால் கட்டாயம் ஆதாh; அட்டை கொண்டு செல்ல வேண்டும். மேலும், உரம் வாங்கச் செல்லும்பொழுது அரசு அறிவித்துள்ளபடி விவசாயிகள் சமூக இடைவெளி விட்டுத் தற்பாதுகாப்பு முறைகளான முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்குத் தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரங்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 மேலும், உரம் குறித்த புகாh;களுக்குத் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உர ஆய்வாளரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தின் 04322 221666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 திடீர் ஆய்வின்போது மேற்படி வழிமுறைகள் பின்பற்றாமல் இருந்தாலோ, அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை அல்லது உரக் கடத்தலில் ஈடுபட்டாலோ உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி எச்சரித்துள்ளார்.


Top