logo
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் விவசாய நிலம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் விவசாய நிலம், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

26/May/2021 07:32:19

ஈரோடு மே: ஈரோடு மாவட்டத்தில், ..டி.யு.சி., மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில், 100க்கும் மேற்பட்ட விளை நிலங்கள், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். டில்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, மக்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும்

மின் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாய போராட்டக்குழு சார்பில் மே26-இல்  நாடு முழுவதும்  கருப்பு கொடி கட்டி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடியில் விளை நிலங்கள், வீடுகளில் கருப்பு கொடியேற்றி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் .எம்.முனுசாமி தலைலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்காஞ்சிகோவிலில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில துணை தலைவர் துளசிமணி தலைமையில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Top