04/Nov/2020 06:04:23
ஈரோடு:மின் வட்டங்களில் பணியாற்றும் வரும் ஊழியர், பொறியாளர் அலுவலர்களின் பதவிகளை பறிக்கக் கூடாது. துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. பதவி உயர்வு புதிய வேலைவாய்ப்புகளை முறையாக வழங்க வேண்டும். அரசாணை எண் 304 -ஐ மின்வாரியத்தில் அமல்படுத்த வேண்டும்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின் ஊழியர்கள் பொறியாளர்கள் பொறியாளர்கள் அலுவலர்கள் பகுதிநேர ஊழியர்கள் ஆகியோருக்கு போனஸ் வழங்க நடவடிக்கை வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு இன்று நடந்த தர்னா போராட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தலைவர் ஜோதி மணி தலைமையில் நடைபெற்ற போராட்ட்த்தில் திரளானோர் பங்கேற்றனர்.