logo
கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ஆவது நாளாக தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ஆவது நாளாக தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

02/Nov/2020 11:18:24

புதுக்கோட்டையில் நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிடாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 11 -ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.

புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பின்படி நேரடி நியமன உதவியாளர மற்றும் பதவி உயர்வு உதவியாளர்களுக்கு இடையே பணி முதுநிலை பட்டியல் கடந்த 7-ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலரால் வெளியிடப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிடாததற்கு காரணமாக உள்ளவர்கள் தற்போது வெளியிடப்பட்ட பணி முதுநிலை பின்பற்றி நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிட கூடாது என மாற்று வருவாய் சங்கத்தில் உள்ளவர்கள் செயல்பட்டு வருவதாகவும், நீதிமன்றத்தில் புதிய தடை உத்தரவு பெறுவதற்கு முன்பாகவே நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று  வலியுறுத்தி  தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர்  தொடர்ந்து 11 -ஆவது  நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நிரந்தர துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிடும் வரை தொடர்ந்து  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 


Top